Posts

Showing posts from February, 2023

149) அன்னை தெரசா

Image
அன்னை தெரசா (கி.பி.1910-1997) : இந்திய வரலாற்றில் தன்னலமற்ற சேவைகளுக்காக பாராட்டப்பட்ட பெண் ஆளுமைகளில் இவர் முதன்மையானவர். அயல்நாட்டு பெண்ணாக இருந்தாலும் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை இந்தியாவிலையே கழித்தவர். இந்திய ஏழை மக்களின் சேவைகளுக்காகவும் ஆதரவற்றோர் கொடும் நோயால் பாதிக்கப்பட்டு குடும்பத்தினரால் ஒதுக்கி வைக்கப்பட்ட நோயாளிகளுக்காவும் தனி இல்லம் அமைத்து அவர்களின் பராமரிப்பை மேற்கொண்டவர். எண்ணற்ற நாடுகள் இவருக்கு தங்கள் குடியுரிமையை அளித்தாலும் இந்தியாவையே தன் வீடாக நினைத்தவர். இறந்த பின்னர் கத்தோலிக்க சபையினரால் "புனிதர்" பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டவர். இவர் கி.பி.1910 அல்பேனியாவில் ஸ்கோப்ஜி நகரில் ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் அஞ்சேஸே (ஆக்னஸ்) கோன்ஜா போஜாஜியூ என்பதாகும். இவரது தந்தை நிக்கல் நிகோலா மற்றும் தாய் போஜாஜியூ திரானி பெர்னாயின் ஆகியோருக்கு 3வது மகளாக பிறந்தார். இவரது மூத்த சகோதரி பெயர் அகா மற்றும் மூத்த சகோதரர் பெயர் லாகஸ் என்பதாகும். தற்போது இவர் பிறந்த நகரம் வடக்கு மாசிடோனியாவின் தலைநகராக உள்ளது. இவரது தந்தை இவரது 8 வயதில் நோய்வாய...

148) உமாபாய் குந்தாப்பூர்

Image
உமாபாய் குந்தாப்பூர் (கி.பி.1892-1992) : இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றவர் இவர். காந்தியடிகளின் அறவழியை பின்பற்றியவர். சுதந்திர போராட்ட வீரர்களுக்கு உணவும் பணமும் தங்க இடமும் அளித்தவர். இவர் உப்பு சத்தியாகிரகத்தில் சிறைப்பட்ட சமயத்தில் இவரது மாமியார் இறந்த நிகழ்வும் 1 வாரம் கழித்தே தெரிந்தது. காந்தியின் போராட்டங்களை செயல்படுத்தியவர். இவர் கி.பி.1892 மார்ச் 25ல் மங்களூரில் கிருஷ்ணராவ் கோலிகேரி மற்றும் ஜம்னாபாய் தம்பதிகளுக்கு மகளாக பவானி கோலிகேரி என்ற இயற்பெயருடன் பிறந்தார். இவருக்கு மொத்தம் 4 சகோதரர்கள் உண்டு. இவர்கள் குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது. இவருக்கு 13 வயதில் சஞ்சீவ் ராவ் குந்தாப்பூர் என்பவருடன் திருமணம் நடந்தது. இவரது மாமனாரான ஆனந்த் ராவ் குந்தாப்பூர் சமூக சீர்திருத்தவாதி. பெண்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவராக இருந்ததால் மாமனாரின் ஆதரவினால் பள்ளியில் சேர்ந்து மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெற்றார். பின்னர் தனது மாமனாருடன் சேர்ந்து மும்பை கவுன் தேவி மகிளா சமாஜ் மூலம் பெண்களுக்கு கல்வி கற்பித்தார். இவரது 31வது வயதில் இவரது கணவர் காச நோய...

147) ருக்மணி லட்சுமிபதி

Image
ருக்மணி லட்சுமிபதி (கி.பி.1892-1951): இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்த பெண்களுக்கு மத்தியில் இவரும் ஒருவர். இவர் இந்திய சுதந்திர போராட்ட களத்தில் தீவிரமாக பங்கு கொண்டது மட்டுமல்லாது சென்னை மாகாணத்தின் முதல் பெண் கேபினட் அமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கி.பி.1892 டிசம்பர் 6ல் ஒரு விவசாய குடும்பத்தில் சீனிவாசராவ்-சூடாமணி தம்பதியருக்கு மகளாக பிறந்தார். இவரது தாத்தா ராஜா டி.ராம்ராவ் ஜமீன்தாராக இருந்தார். அந்த காலத்தில் பால்ய விவாகம் நடைபெற்று வந்ததால் இவரது தந்தையும் இவருக்கு பால்ய விவாகத்திற்கு மணமகனை தேடினார். அந்த நேரத்தில் வீரேசலிங்கம் பந்தலு என்ற சுதந்திர போராட்ட வீரர் இவரின் தந்தையிடம் பால்ய விவாகத்தின் மூலம் ஏற்படும் தீமைகளை எடுத்து கூறி அந்த முடிவினை கைவிட வைத்தார். அவர் தனது மருமகள் ராஜாமணி என்பவருடன் இவரையும் பள்ளிக்கு கல்வி பயில தந்தையிடம் அறிவுரை கூறி பள்ளிக்கு அனுப்பினார். இந்த வீரேசலிங்கம் பந்தலு அவர்களின் அறிவுரையினால் இவர் பிற்காலத்தில் சுதந்திர போராட்ட களங்களில் பங்கு பெற்றார். பள்ளி படிப்பு முடிந்ததும்  இவருக்கு உடல்நலம் சரியில...

146) அம்மு சுவாமிநாதன்

Image
அம்மு சுவாமிநாதன் (கி.பி.1894-1978) இந்திய வரலாற்றில் தங்களது தியாகத்தாலும் திறமையினாலும் இடம்பிடித்த பெண்மணிகளுள் அம்மு சுவாமிநாதனும் ஒருவர். சுதந்திர போராட்ட களத்திலும் பெண்ணீயம் தொடர்பான போராட்டஙக்ளிலும் மட்டுமல்லாது அரசியல் நிர்ணய சபைகளில் பங்கு கொண்டு இந்திய அரசியல் சட்ட நிர்ணயத்தில் குறிப்பிடத்தக்க பங்கை வகித்தவர் இவர். அம்மு குட்டி மேனன் இன்றைய கேரளாவில் பாலக்காட்டில் அனக்கராவில் ஒரு வடக்காத் மேனன் குடும்பத்தில் ஏப்ரல் 22 கி.பி.1894ல் பிறந்தார். தாய் தந்தை இருவரும் நாயர் குடும்பத்தை சேர்ந்தவர்கள். 9 பெண் குழந்தைகள் உட்பட 13 குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் இவர் இளையவர். இவரது சிறுவயதிலையே இவரது தந்தையார் மறைந்தார். இவரது தாயார் ஒவ்வொரு குழந்தைகளின் திருமணத்திற்காகவும் தினசரி வாழ்க்கைக்கும் போராடி இவர்களை வளர்த்தார். அதனால் இவர் சிறு வயதில் பள்ளிக்கு செல்லவில்லை. ஆனாலும் மலையாள மொழியை எழுத படிக்க தெரிந்த அளவிலையே இவரது கல்வி இருந்தது. இவரது 13 வயதில் கேரள ஐயர் குடும்பத்தை சேர்ந்த சுவாமிநாதன் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். இவரது கணவர் இவரது தந்தையின் நண்பர் . அதனால் அவர...

145) குந்தள குமாரி சபத்

Image
குந்தள குமாரி சபத் (கி.பி.1901-1938) : இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் தனது கவிதைகளால் நாட்டுபற்றையும் விடுதலை உணர்வையும் கொழந்து விட்டு எரிய செய்த வீரப்பெண்மணி. ஒரியாவின் நைட்டிங்கேல் என்றும் புல்புல் என்றும் அழைக்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் வழிகாட்டுதலில் படி ஒரியா மக்களின் மனங்களில் சுதந்திர கனலை தன் கவிதைகளால் எழுப்பினார். இவர் கி.பி.1901ல் ஒரிசாவில் அன்றைய பஸ்தூர் மாநிலம் ஜக்தல்பூர் என்னுமிடத்தில் (இந்த இடம் இப்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளது) பிறந்தார். இவரது தந்தை டேனியல் சபத் தாயார் மோனிகா சபத். இந்து பிராமணரான இவரது குடும்பத்தில் மருத்துவரான இவரது தந்தை இவர் பிறப்பதற்கு முன்பே கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். இவரது தந்தை கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய காரணம் தெரியவில்லை. பின்னர் இவரது பெற்றோருடன் சிறுவயதிலையே பர்மாவுக்கு குடிபெயர்ந்தார். பின்னர் இவரது தந்தை பர்மாவிலையே இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய இவரது தாயும் இவரும் இவரது 14வது வயதில் ஒரிஸ்ஸா வந்து குர்தாவில் குடியேறினர். இவரது தாய் கல்வி பெறாதவராக இருந்தாலும் அவரது விடாமுயற்சியால் இவர் ராவன்பூரில் உள்ள பெண்கள் பள்ளியில் ப...

144) கமலா சோஹோனி

Image
கமலா சோஹோனி (கி.பி.1912-1998) : இந்திய சரித்திரத்தில் தடைகளை உடைத்தெறிந்து சாதனை புரிந்த பெண்மணிகள் பலர் உண்டு. அதில் இருவரும் ஒருவர். இந்திய சுதந்திரத்திற்கு முன்பு அறிவியலில் டாக்டர் பட்டம் பெற ஆண்கள் மட்டுமே இருந்த நிலையில் அதை உடைத்தெறிந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் இந்திய பெண்மணி இவர். இவர் கி.பி.1912 ஜூன் 8ம் தேதி மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் நாராயண் ராவ் பகவத் என்பவருக்கு மகளாக பிறந்தார். இவரது தந்தையும் அவரின் சகோதரரான மாதவ் ராவ் பகவத் ஆகிய இருவருமே வேதியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள். அதனால் இவருக்கும் அறிவியல் ஆர்வம் தொற்றிக்கொள்ள பம்பாய் பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையில் (இயற்பியல்+வேதியியல்) இளங்கலையில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். பின்னர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் முதுகலை மாணவராக சேர முயற்சித்தார். அந்த நேரத்தில் முதுகலையில் எந்த பெண்களும் இதுவரை சேர்ந்து படிக்கவில்லை என்ற காரணத்தால் அதன் இயக்குனரான விஞ்ஞானி சர்.சி.வி.இராமன் இவருக்கு அனுமதி அளிக்க மறுத்தார். மகாத்மா காந்தியை வழிகாட்டியாக கொண்ட இவர் சத்தியாகிரக ...

143) லலிதா

Image
லலிதா (கி.பி.1919-1939) :  இந்திய வரலாற்றில் குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி தங்கள் கனவுகளை நோக்கி எதிர்நீச்சல் போட்டு அதை நனவாக்கிய பெண்கள் சிலர் தான். அவர்களுள் ஒருவராக இந்தியாவில் முதன்முதலாக பொறியாளர் (என்ஜினீயர்) பட்டம் பெற்ற பெண்மணியாக தனது பெயரை வரலாற்றில் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துள்ளார். 15 வயதில் திருமணம் முடிந்து பெண் குழந்தைக்கு தாயாகி 18 வயதில் கணவரை இழந்து விதவையாக ஆன பெண்ணான இவர் உறவினர்களின் எதிர்ப்பை மீறி படித்து படித்து பெற்று என்ஜினீயராக தொழில் செய்தவர். இவர் கி.பி.1919 ஆகஸ்ட் 27ம் தேதி சென்னையில் கிண்டி மின் பொறியியல் கல்லூரி மின் பொறியியல் துறையில் போராசிரியராக இருந்த சுப்பாராவ்க்கு 5வது மகளாக பிறந்தார். இவர் 15 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டார். 17வது வயதில் பெண் குழந்தையான சியாமளா பிறந்தார். குழந்தை பிறந்த 4 மாதத்திலையே இவரது கணவர் மறையவே 17வது வயதிலையே  விதவையானார். ஆனால் அதன்பின் மகளின் நிலையை மாற்ற இவரது தந்தை இவரது படிப்பை தொடர ஆதரவு கொடுத்தார். உறவினர்கள் எல்லாம் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதனை புறக்கணித்து சென்னை ராணிமேரி கல்லூரியில் கி...

142) கொர்னேலியா சொராப்ஜி

Image
கொர்னேலியா சொராப்ஜி (கி.பி.1866-1954) : இந்தியாவில் ஆணுக்கு இருந்த தொழில் உரிமைகள் பெண்களுக்கு மறுக்கப்பட்டு இருந்த காலகட்டத்தில் 19ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து 20ம் நூற்றாண்டு மத்திய பகுதி வரை ஆணுக்கு இணையானவர்கள் பெண்கள் என்றும் அவர்களுக்கு இணையாக படித்து பட்டம் பெற்று 19ம் நூற்றாண்டின் இறுதியிலையே ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சென்று வழக்கறிஞர் பட்டம் பெற்று ஆனால் பெண்களுக்கு வழக்கறிஞர் தொழில் நடத்த அனுமதிக்காக போராடியவர். சமூக நீதி மற்றும் பெண்ணுரிமைக்காகவும் குரல் கொடுத்தவர் இவர். இவர் கி.பி.1866 நவம்பர் 15ல் நாசிக் நகரில் பினான்சினா மற்றும் ஃபோர்டு சொரப்ஜி ஆகியோருக்கு மகளாக பிறந்தார். இவருக்கு சூசி சொரப்ஜி, ஆலிஸ் சொரப்ஜி என்று இரு சகோதரிகளுடன் 10 குழந்தைகளில் ஒருவராக பிறந்தார். ஆனால் இவருடன் 5 சகோதரிகள் மற்றும் 1 சகோதரர் என 7 பேர் மட்டுமே உயிர் பிழைத்து இருந்தனர். இவரது தாய் தென்னிந்தியாவை சேர்ந்தவர். இந்து மதத்திலிருந்து சிறு வயதிலையே கத்தோலிக்கராக ஆனவர். தந்தை ஜொராஷ்டிரியத்திலிருந்து (பார்சி) மதம் மாறிய கிறிஸ்தவர். இவரது தாய் பெண்கள் கல்வி கற்பதன் அவசியத்தை அனைவருக்கும் உணர்த்தி...

141) சகுந்தலா தேவி

Image
சகுந்தலா தேவி (கி.பி.1929-2013) : இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க பெண்மணிகளுள் கணித மேதை சகுந்தலா தேவியும் ஒருவர். பக்தியாலும், தேசத்திற்காக பாடுபட்ட வீரப்பெண்மணிகளுக்கு மத்தியில் தனது அறிவுதிறனுக்காக பாராட்டப்பட்ட பெண்மணி. கால்குலேட்டர் மற்றும் கம்யூட்டரையும் மிஞ்சிய வேகத்தில் கணித புதிர்களை விடுவித்த கணித மேதைகளுள் ஒருவர்.  இவர் கி.பி.1929 நவம்பர் 4ம் தேதி பெங்களூரில் ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையான சுந்தரராஜ ராவ் பூசாரியாக இருந்தாலும் சர்க்கஸ் சாகசங்கள் மீது ஈடுபாடு கொண்டவர். சிங்கத்தின் வாயில் தலையை விடுவது, மேஜிக் நிகழ்ச்சிகள் மற்றும் சீட்டுகட்டுகளில் எண் வித்தை செய்வது அவருக்கு பிடிக்கும். ஆனால் இவருக்கு தந்தையிடம் இருந்து எண் கணிதம் மிகவும் ஈர்ப்பாயிற்று‌. இவரின் 3 வயதில் தந்தையுடன் சீட்டுகட்டு வித்தை விளையாட்டில் ஈடுபட்டார். அப்போது இவரது தந்தைக்கு இவரின் கணித திறமை புலனாயிற்று. இதனால் தனது சர்க்கஸ் தொழிலை விட்டுவிட்டு மகளை அழைத்துக் கொண்டு பெங்களூரில் சாலைகளில் சீட்டுகட்டு வித்தை விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்தியதில் பெங்களூர் முழுவதும் பிரபலமாயினார். ம...

140) துர்காபாய் தேஷ்முக்

Image
  துர்கா பாய் தேஷ்முக் (கி.பி.1909-1981) : இந்திய பெண்கள் ஆந்திர மாநிலத்தில் முதன்முதலில் ஆந்திர மகிளா சமிதி (மகளிர் மாநாடு) அமைத்து பெண்ணுரிமை மற்றும் பெண் சமூக நீதிக்காக போராடியது மட்டுமல்லாது ஆங்கில வழிக் கல்வியை எதிர்த்துப் படிப்பை 12 வயது பள்ளியை விட்டு வந்த இவர் பின்னர் சட்டப் படிப்பு படித்து வழக்கறிஞராகப் பணியாற்றியவர். குழந்தை திருமணத்தை எதிர்த்து தான் குழந்தையாக இருந்தபோது திருமணத்தை எதிர்த்து வெளியேறிய பின்னர் தன் மனதுக்கு பிடித்த நேரு அமைச்சரவையில் இருந்த இந்திய நிதியமைச்சர் திருந்தாவன் தேஷ்முக்கை திருமணம் செய்தவர். எந்த வித சூழ்நிலையிலும் பெண் கல்வி மற்றும் பெண்ணுரிமையை விட்டு கொடுக்காமல் பெண்களுக்கு மாநாடு அமைத்து வழி நடத்திய வீரப்பெண்மணி இவர். இவர் கி.பி.1909 ஜூலை 15ம் தேதி இன்றைய ஆந்திர பிரதேசத்தில் உள்ள இராஜமுந்திரியில் பிராமண சமூகத்தில் கும்மிடிதாலா குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு எட்டு வயதாக இருக்கும்போது உறவினரான சுப்பராவுடன் குழந்தை திருமணம் நடந்தது. ஆனால் இவர் வளர்ந்ததும் குழந்தை திருமணம் செய்து கொள்ளாமல் அவருடன் வாழ மறுத்து விட்டார். ஆனாலும் பின்னாட்களில் வி...