Posts

Showing posts from October, 2022

139) பெயர் தெரியாது (அர்ஜூன் சிங்கின் தியாகத்தாய்)

பெயர் தெரியவில்லை (அர்ஜூன் சிங் தாய்) : இந்திய வரலாற்றில் எத்தனையோ பெண்கள் தங்களின் தியாகத்தினாலும் வீரத்தினாலும் நாட்டுபற்றினாலும் உயர்ந்து நிற்கின்றனர். அவர்களுள் ஒருவராக நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்த இன்றைய ஹரியானாவிலுள்ள அர்ஜூன் சிங் என்பவரின் தாய். நேதாஜி பர்மாவில் இருந்த சமயம் இந்திய தேசிய இராணுவத்திற்கு ஆள் எடுக்க அறிவிப்பு விடுத்தார். "சுதந்திரத்திற்கு விலையாக நம் இரத்தத்தை கொடுப்போம்" என்று ரேடியோவில் அறிவிப்பு கொடுத்தார்.ஆசாத் ஹிந்த் படைக்கு கேப்டன் தில்லான் என்பவரை நியமித்து இளைஞர்களை படைக்கு ஆள் எடுக்க சொன்னார். அப்போது தாய்க்கு ஒரே மகனாக இருந்தால் படைக்கு எடுக்க வேண்டாம் என்று உத்தரவு அனுப்பினார். அதன்படி ஆள் எடுத்துக்கொண்டு இருந்தனர். இந்த நேரத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வரிசையில் காத்திருந்தனர். அவர்களுள் ஒருவராக அர்ஜூன் சிங் என்பவரும் இருந்தார். அவரை கேப்டன் தில்லான் விசாரிக்கும்போது அவர் தந்தையை இழந்தவர். தாயின் ஒரே மகன் என்றும் மாடுகளை வைத்து பிழைப்பு நடத்துவதாக கூறவும் கேப்டன் தில்லான் அவரிடம் உன்னுடைய தேச பக்தி குறைவில்லாத...

138) சுஹாசினி கங்குலி

Image
சுஹாசினி கங்குலி (கி.பி.1909-1965) : இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் தங்களின் தியாகத்தாலும் தன்னலமற்ற உள்ளத்தாலும் இடம்பிடித்த பெண்களுள் இவரும் ஒருவர். படிக்கும் காலத்திலையே கல்லூரியில் புரட்சிகர இளைஞர்களின் இயக்கத்தில் இணைந்து ஆயுதமேந்தி இந்திய சுதந்திர போராட்ட களத்தில் ஈடுபட்டவர் இவர். இவர் கி.பி.1909 பிப்ரவரி 3ல் இன்றைய பங்களாதேஷில் குல்னா என்னும் ஊரில் அவினாஷ் சந்திர கங்குலி மற்றும் சரளா சுந்தரா தேவி ஆகியோருக்கு மகளாக பிறந்தார். இவர் கி.பி.1924ல் டாக்கா ஈடன் பள்ளியில் மெட்ரிகுலேஷன் தேர்வில்  வெற்றி பெற்றார். மேற்படிப்பு படிக்கும்போதே கொல்கத்தாவில் காது கேளாத வாய் பேசமுடியாத குழந்தைகளுக்கான பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைத்ததால் இன்டர்மீடியட் ஆஃப் ஆர்ட்ஸ் படிப்பை  நிறுத்திவிட்டு ஆசிரியராக வேலை பார்த்தார். கொல்கத்தாவில் தங்கியிருந்த போது கமலா தாஸ்குப்தா மற்றும் கல்யாணி தாஸ் ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது. அவர்கள் இவரை புரட்சிகர முன்னணியான ஜூகந்தர் கட்சிக்கு அறிமுகப்படுத்தினர். இவர் சத்ரி சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார். கமலா தாஸ் குப்தா மற்றும் சத்ரி சங்க நிர்வாகத்தின் அறிவுறு...

137) காளி பாய்

Image
காளி பாய் (கி.பி.1934-1947) : இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் ஆண்களுக்கு சரிசமமாய் பெண்களும் தியாகங்கள் செய்துள்ளனர். 13 வயது சிறுமியான இந்த பெண் தனது ஆசிரியரை ஆங்கில அராஜத்திலிருந்து காக்க தனது இன்னுயிரை நீத்தார்.  13 வயதாக இருந்தாலும் தியாகத்திலும் நாட்டுபற்றினாலும் மற்றவர்களுக்கு நிகரான தியாகத்தை செய்துள்ளார். இவர் கி.பி.1934ல் இன்றைய இராஜஸ்தானிலுள்ள துங்கர்பூர் அருகிலுள்ள ராஸ்தபால் என்னும் கிராமத்தில் பிறந்தார். இளமையில் கல்வியை துங்கர்பூரில் நானா பாய் காந்த் என்பவர் நடத்திய பள்ளியில் படித்து வந்தார். இந்த பள்ளியில் பாடப்புத்தகங்களில் உள்ளது போக இந்தியாவின் பெருமை, அன்னியர்கள் நம்மை எப்படியெல்லாம் சுரண்டி கொழுக்கிறார்கள் என்பது பற்றியும் இந்திய சுதந்திரத்தின் அவசியத்தை பற்றியும் சுதந்திர இந்தியாவிற்கு நம்மால் தேசிய பக்தி உள்ளம் கொண்டு பாடுபட வேண்டும் என்று இளமையிலையே மாணவர்களின் உள்ளத்தில் தேசபக்தியை ஊட்டி வளர்த்தனர். இதனால் இங்குள்ள மாணவர்கள் நாட்டுப்பற்று உணர்வுடன் இருந்தனர். இதனை அந்த பகுதியின் ஆட்சியாளரான மகாராவல் விரும்பவில்லை. அவர் பள்ளியில் பாடங்களுடன் தேசிய உணர்வு ஊட...

136) லூர்தம்மாள் சைமன்

Image
லூர்தம்மாள் சைமன் (கி.பி.1912-2002) : இந்திய சரித்திரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அந்த வகுப்பில் பிறந்து அவர்களின் நலனுக்காக பாடுபட்டு அமைச்சரவையில் இடம்பெற்று அவர்களின் நலனுக்காக போராடியவர்களுள் இவரும் ஒருவர். மீனவர் குடும்பத்தில் பிறந்து மீன்வளத்துறை அமைச்சராக பதவியேற்று அவர்களின் நலனுக்காக பாடுபட்டவர். ஜப்பானின் ஜிலேபி வகை மீன்களை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர் இவரே. அதனால் அந்த மீனுக்கு லூர்தம்மாள் மீன் என்று வேறு பெயரும் உண்டு. இவர் கி.பி.1911 செப்டம்பர் 26ல் கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி என்னும் கிராமத்தில் மீனவர் குடும்பத்தில் அலெக்சாண்டர் - பார்பரம்மாள் தம்பதியருக்கு மகளாக பிறந்தார். இவரது தாய் இவரது சிறு வயதிலையே மரணமடைந்து விட்டார். இவரது தந்தை இலங்கை கொழும்பு துறைமுகத்தில் கருவாட்டு ஏற்றுமதி வியாபாரம் செய்து வந்தார். இவர் நாகர்கோயில் புனித ஜோசப் பள்ளியில் 10ம் வகுப்பு வரை ஆங்கில பள்ளி பயின்றார். பின்னர் அதே பள்ளியில் சம்பளம் பெறாத ஆசிரியராக பணியாற்றினார். இவருக்கும் குளச்சல் நகரை சேர்ந்த அலெக்சாண்டர் இம்மானுவேல் சைமனுக்கும் திருமணம் நடந்து இருவரும் வளைகுடா நாட்டில் கணவர...

135) கங்கா தேவி

Image
கங்கா தேவி (கி.பி.14ம் நூற்றாண்டு) : வரலாற்றில் நிறைய பெண்மணிகளும் அரசிகளும் தங்களது தியாகத்தாலும் வீரத்தாலும் கருணையினாலும் பக்தியினாலும் குறிப்பிடப்பட்டுள்ளனர். அவர்களுள் ஒருவர் தான் "மதுரா விஜயம்" என்ற நூலை எழுதிய கங்கா தேவி என்ற கங்கம்மா. இவர் விஜயநகர பேரரசரான புக்க ராயரின் மகனான குமார கம்பணின் மனைவி. 60 ஆண்டுகளாக டெல்லி சுல்தான்களின் படையெடுப்புகளால் மதுரை அடிமைப்பட்டு இருந்ததை வீழ்த்தி மதுரையை அன்னியரின் பிடியிலிருந்து மீட்டு மதுரை மீனாட்டசியம்மனின் சிலையை காத்த வரலாற்றை கொண்டவர் இவர். கங்காம்பிகா என்ற இயற்பெயருடைய இவர் விஜயநகர பேரரசை தோற்றுவித்த ஹரிஹர புக்க சகோதரர்களில் புக்க ராயரின் மகனான குமார கம்பனாவின் மனைவி. இவர் சமஸ்கிருதத்தில் சிறந்த அறிஞர் மட்டுமில்லாது கவி பாடும் வல்லமை உடையவர். இவர் தனது கணவரான குமார கம்பனார் மதுரை மீது படையெடுத்து மதுரை சுல்தான்களின் ஆட்சியை அகற்றி மதுரையையும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலையும் மீட்ட வரலாற்றை வீர கம்பராய சரிதம் அல்லது மதுரா விஜயம் நூலில் எழுதியுள்ளார். இதில் காஞ்சிபுரத்தை கைப்பற்றிய கம்பனார் மற்றும் கங்கா தேவி இருவரின் கனவிலும்...

134) ஃபாத்திமா பேகம்

Image
ஃபாத்திமா பேகம் (கி.பி.1892 - 1983) : சரித்திரத்தில் நின்ற பெண்மணிகளுள் இவரும் ஒருவர். தற்போது கூட இந்திய சினிமாவில் ஒரு சில பெண் இயக்குனர்களே உள்ளனர். ஆனால் திரைப்படம் கண்டுபிடிக்கப்பட்டு முதன் முதலில் ஊமை படங்களாக வந்த போது இவர் பேசா திரைப்படங்களை இயக்கியதோடு நடிகை மற்றும் தயாரிப்பாளராக பன்முக அவதாரம் எடுத்த பெண்மணி இவர். இந்தியாவின் முதல் பேசும் திரைப்படத்தில் இவர் மகளே நடிகையாக அறிமுகம் ஆனார். இவர் கி.பி.1892ல் உருது முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார். இவர் இன்றைய சூரத் அருகிலுள்ள சச்சின் நகரை சேர்ந்த நவாப் சிடி இப்ராஹிம் முஹம்மத் யாகூத் கான் என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஜூபைதா, சுல்தானா உட்பட 3 மகள்கள் பிறந்தனர். இவர்களில் ஜூபைதா மற்றும் சுல்தானா ஆகியோரும் நடிகைகளாக இருந்தனர். ஃபாத்திமா பேகம் நாடக மேடைகளில் நடிக்க ஆரம்பித்து பின்னர் திரைப்படங்களுக்கு மாறினார். கி.பி.1922ல் பேசா படமான "வீர அபிமன்யு" படத்தில் அறிமுகனார். இவர் கி.பி.1926ல் ஃபாட்மா பிலிம்ஸை ஆரம்பித்தார். பின்னர் கி.பி.1928ல் அது விக்டோரியா ஃபாட்மா பிலிம்ஸாக மாறியது. கி.பி.1926ல் புல்புல்-இ-பாரிஸ்தான் படத்தின்...

133) பேகம் ஷம்ரூ

Image
 பேகம் ஷம்ரூ (கி.பி.1753-1836) : வரலாற்றில் தங்களின் தியாகத்தாலும், வீரத்தாலும், கருணையினாலும் எத்தனையோ பெண்கள் நீங்கா இடம் பிடித்துள்ளனர். அவர்களுள் ஒருவராக இவர் நடன பெண்ணாக இருந்து ஒரு நாட்டின் ஆட்சியாளராக மாறி நாட்டை திறம்பட நிர்வகித்த பெருமையுடையவர். முஸ்லீமாக பிறந்து இவரின் ஐரோப்பிய கணவரால் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி ஆட்சி புரிந்தார். கி.பி.19ம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட ஒரே கத்தோலிக்க ஆட்சியாளராக இவர் மட்டுமே இருந்தார். கி.பி.1753ல் பிறந்த இவர் காஷ்மீரி குடும்பத்தை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் பர்சானா ஜெப்புன்னிஸா. இவரது தந்தையான லத்தீப் அலி கான் அரேபிய வம்சாவளியை சேர்ந்தவர். இவரது தந்தை இவரது 6 வயதில் மறைந்த போது தந்தையின் இன்னொரு மனைவியின் மூலம் பிறந்த சகோதரரின் கொடுமைகளால் இவரும் இவரின் தாயும் டெல்லிக்கு குடிபுகுந்தனர். அங்கு பிழைப்புக்காக நடன தொழிலை கற்றுக்கொண்டு இவர் நடன கலைஞராக மாறினார். இவர் பரத்பூர் ராஜாவான ஜவஹர் சிங்கின் கீழ் வேலைக்கு இருந்தார். இந்த நேரத்தில் கி.பி.1765களில் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த கூலிப்படை தலைவரான வால்டர் ரெய்ன்ஹார்ட் சோம்ப்ரே டெல்லியின் சாவ்ரி ப...

132) அரக்கல் பீபி இரண்டாம் ஜூனுமாபே

Image
அரக்கல் பீபி இரண்டாம் ஜூனுமாபே (ஆட்சி : 1777-1819) : வரலாற்றில் இந்தியாவில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடிய மைசூர் புலி திப்பு சுல்தானின் அணியில் இணைந்து அவருக்கு சாதகமாக ஆங்கிலேயர்களை எதிர்த்தவர் தான் இன்றைய கேரளத்தில் கண்ணூர் (அரக்கல்) பகுதியின் ராணியாக கி.பி.1777 முதல் கி.பி.1819 வரை ஆட்சியில் இருந்த அரககல் பீபி இரண்டாம் ஜூனுமாபே ... அரக்கல் ராஜ்ஜியம் இன்றைய கேரளாவின் மலபார் பகுதியில் கண்ணனூரில் அமைந்த ஒரு முஸ்லீம் ராஜ்யம். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கொளத்து ராஜாவின் மகளான ஒரு இளவரசி சிறு வயதில் குளத்தில் குளிக்கும்போது மூழ்கினார். சக தோழிகள் அவரை காப்பாற்ற சப்தம் எழப்பியதை கேட்டு அந்த வழியே வந்த முஸ்லீம் சிறுவன் மூழ்கி கொண்டிருந்த சிறுமியை இளவரசி என்று அறிந்து அந்த நேரத்தில் கேரளாவில் தீண்டாமை இருந்ததால் சிறிது தயங்கினாலும் குளத்தில் குதித்து சிறுமியை காப்பாற்றினான். மேல் சாதியினரை தீண்டினால் மரண தண்டனை விதிக்கும் சட்டமும் இருந்தது. சிறுமிக்கு உடலை மறைக்க புடவை கொடுத்தான். அந்த காலத்தில் புடவை கொடுத்தால் திருமணம் முடிந்ததாக அர்த்தம் கொள்ளப்பட்ட காலம் என்பதால் இருவரும் ...

131) மெஹர்பாய் டாட்டா

Image
மெஹர்பாய் டாடா (கி.பி.1879-1931) : இந்திய வரலாற்றில் இடம்பிடித்த ஜாம்ஷெட்ஜி டாடாவின் மூத்த மகனான தோரப்ஜி டாடாவின் மனைவி. அந்த காலத்தில் பெண்ணுரிமை போராட்டங்களை முன்னெடுத்து முதல் பெண்மணியாகவும் டென்னிஸ் உலகில் தனது பராம்பரிய இந்திய உடையுடன் களத்தில் இறங்கி வெற்றி பெற்ற பெண்மணியாகவும் அறியப்படுகிறார். இவரது கணவரின் சகோதரின் பேரன் தான் இன்றைய ரத்தன் டாடா அவர்கள். மெஹர்பாயின் சகோதரரான ஜஹாங்கீர் பாபாவின் மகன் தான் இந்திய அணுசக்தி வளர்ச்சிக்கு அடிகோலிய டாக்டர் ஹோமி பாபா அவர்கள். மிகப்பெரிய பணக்கார குடும்பத்தில் வாழ்க்கைபட்டாலும் இந்திய பெண்களின் அடிப்படை உரிமை, பெண்களுக்கு வாக்குரிமை, குழந்தை திருமணத்தை ஒழித்தல், பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பர்தா முறை நீக்குதல் ஆகியவற்றுக்காக போராடியவர் இவர். மெஹ்ரி என்று பிரபலமாக அறியப்பட்ட இவர் கி.பி.1879 அக்டோபர் 10ல் மும்பையில் அப்போதைய மைசூர் மாநிலத்தின் இன்ஸ்பெக்டர் ஜெனரலான எச்.ஜே.பாபாவின் மகளாக பார்சி குடும்பத்தில் பிறந்தார். இலக்கியம், பியானோ, டென்னிஸ் மற்றும் குதிரை சவாரி போன்றவற்றில் விருப்பமுடையவர். இந்திய பராம்பரிய உடையான சேலையில் டென்னிஸ் வ...

130) கஸ்தூர்பா காந்தி

Image
கஸ்தூர்பா காந்தி (கி.பி.1869-1944) : இந்திய சரித்திரத்தில் இடம்பிடித்த பெண்களில் இவரும் முக்கியமானவர். மகாத்மா காந்தியின் மனைவி. அவரின் எல்லா போராட்டங்களிலும் துணை நின்றவர். தென்னாப்பிரிக்கா போராட்ட களத்திலும் உப்பு சத்தியாகிரகம் உள்ளிட்ட எல்லா போராட்டங்களிலும் காந்தியுடன் இணைந்து போராடியுள்ளார். அவரின் போராட்டங்களில் தோளோடு தோள் நின்று இணைந்து போராடியவர் இவர். இவர் கி.பி.1869 ஏப்ரல் 11ல் ( அட காந்திஜியின் மனைவி அவரை விட 6 மாதம் மூத்தவர் !!! ) இன்றைய குஜராத்தின் போர்பந்தர் நகரில் ஒரு பெரிய வணிக குடும்பத்தில் கோகுல்தாஸ் கபாடியாவின் மகளாக பிறந்தார். காந்திஜிக்கு உறவுமுறை என்பதால் கி.பி.1883ல் இவருக்கும் காந்திஜிக்கு 13வது வயதில் திருமணம் நடந்தது. எழத படிக்க தெரியாத இவருக்கு காந்தியே எழுத படிக்க கற்று கொடுத்தார். கி.பி.1888ல் இலண்டனுக்கு மேல் படிப்புக்காக காந்திஜி சென்றபோது இவர் இங்கேயே இருந்தார். அந்த நேரத்தில் முதல் பிரசவம் என்பதால் செல்ல வில்லை என்று தெரிகிறது. தமப்திகளுக்கு ஹரிலால், மணிலால், ராம்தாஸ் மற்றும் தேவதாஸ் என்று 4 மகன்கள் பிறந்தனர்.  கி.பி.1897ல் காந்திஜி தொழில் காரணமாக ...

129) அன்னை சாரதா தேவி

Image
அன்னை சாரதா தேவி (கி.பி.1853-1920) : . இந்திய வரலாற்றில் பக்தியினால் இடம்பிடித்த பெண்மணிகளுள் இவரும் ஒருவர். புகழ்பெற்ற இராமகிருஷ்ண மிஷன் மற்றும் சாரதா மிஷன் இவரது கொள்கைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. புனித அன்னை என்று இராமகிருஷ்ண மடத்தின் உறுப்பினர்களால் வணங்கப்படும் பெருமைக்குரியவர்.  இவர் கி.பி.1853 டிசம்பர் 22ல் இன்றைய மேற்கு வங்காளத்தில் பங்குரா மாவட்டத்தில் உள்ள ஜாய்ரம்பதி என்னும் சிற்றூரில் இராமச்சந்திர முகோபாத்யாய் - ஷ்யாமா சுந்தரி தேவி தம்பதிகளுக்கு மகளாக பிறந்தார். இவரது தந்தை விவசாயியாகவும் பூசாரியாகவும் வாழ்க்கை நடத்தினார். இவருக்கும் இராமகிருஷ்ணருக்கும் கி.பி.1859ல் இவருக்கு திருமணம் நடந்தது. அப்போது இவருக்கு 6 வயதாகவும் இராமகிருஷ்ணருக்கு 23 வயதாகவும் இருந்தது. இவர் தனது 18வது வயது வரை பெற்றோருடன் தான் வசித்து வந்தார். கி.பி.1864ல் வங்காள பஞ்ச காலத்தின் போது இவரது குடும்பத்தினருடன் மக்களின் பசிக்கு உணவு வழங்க பணியாற்றினார். கல்வி பயிலாவிட்டாலும் இளைய சகோதரர்களை வளர்ப்பிலும் பராமரிப்பிலும் தாய்க்கு உதவியாக இருந்தார். சிறு வயதிலிருந்தே அடிக்கடி தியானம் செய்யும் பழக்கம்...

128) கே.பி.சுந்தராம்பாள்

Image
கே.பி.சுந்தராம்பாள் (கி.பி.1908-1980) : கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் என்ற பெயரின் சுருக்கமான கே.பி.சுந்தராம்பாளை அறியாதவர் யாரும் இருக்கமுடியாது. தமிழிசை, நாடகம், அரசியல், திரைபடம் மட்டுமில்லாது ஆன்மீகம் முதலான பல துறைகளிலும் தனது புகழை நிலைநாட்டினார். இன்றும் ஒளவையார் வேடத்தில் வேறு யாரையும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அந்த வேடத்தில் கனகச்சிதமாக பொருந்தியவர். இவர் கி.பி.1908 அக்டோபர் 11ல் இன்றைய ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி கிருஷ்ணசாமி-பாலாம்பாள் தம்பதியருக்கு மகளாக பிறந்தார். இவருக்கு 2 சகோதரர்கள் உண்டு. இவரது தந்தையார் இவரது இளம் வயதிலையே மரணமடைந்ததால் இவரது தாயாரின் சகோதரர்களின் தயவில் தான் வாழ்க்கையை நடத்தினார்கள். இவர் "கொடுமுடி லண்டன் மிஷன் ஸ்கூல்" என்ற பள்ளியில் கல்வி பயின்றார். இவரது பாடல் பாடும் திறனை கண்ட ஊர் பெரியவர்கள் அவ்வப்போது இவரை பாட அழைத்து கேட்பார்கள். அவர்கள் சிறுமியான இவரை கோயிலில் பாட சொல்லினர். கோயிலில் இவர் பாட ஆரம்பித்தவுடன் கூட்டம் அதிகமாக வரத்தொடங்கியது. இவர் ரயிலில் தனது தாய்வழி பாட்டனாரின் ஊரான கரூருக்கு செல்லும்போது பாட்டு பாட ஊர்...

127) டி.கே.பட்டம்மாள்

Image
டி.கே. பட்டம்மாள் (கி.பி.1919-2009) ; சங்கீத உலகில் இருபதாம் நூற்றாண்டில் ஆண்களே கோலோச்சி கொண்டிருந்த காலகட்டத்தில் தங்களின் இசைத்திறமையால் கச்சேரிகளின் மூலம் "பெண் மும்மூர்த்திகள்" என்ற பட்டம் பெற்றவர்களாக எம்.எஸ்.சுப்பு லெட்சுமி, எம்.எல். வசந்தகுமாரியுடன் மூன்றாவது நபராக அறியபப்ட்டவர் தான் டி.கே. பட்டம்மாள். இவர் சங்கீத கான சரஸ்வதி, இசை பேரரசி என்ற பெயர்களில் அழைக்கப்பட்டார்.  கி.பி.1919 மார்ச் 19ல் தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்திற்கு அருகில் தாமல் என்னும் கிராமத்தில் கிருஷண்சாமி தீட்சிதர் மற்றும் காந்திமதி (இராஜம்மாள்) ஆகியோருக்கு மகளாக அலுமேலு என்ற இயற்பெயருடன் பின்னாளில் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் (டி.கே.பட்டம்மாள்) என்ற பெயரில் அழைக்கப்பட்ட இசை பேரரசி பிறந்தார். இவரது தாயார் சிறந்த பாடகியாக இருந்தாலும் பொதுவிலோ குடும்ப வைபவங்களிலோ பாட அனுமதிக்கப்படவில்லை. இவர் 3 மாத குழந்தையாக இருந்தபோது இவரது தந்தை ரமண மகரிஷியிடம் அழைத்து செல்ல ரமணர் இவரின் நாக்கில் தேன் தடவி ஆசிர்வதித்தார். இசை ஞானம் குரல் வளத்துடன் நன்கு பாடுவதற்கு ரமணரின் ஆட்சியே காரணம் என்று தந்தை அடிக்கடி இவரிடம் கூ...

126) எம்.எஸ்.சுப்புலெட்சுமி

Image
எம்.எஸ்.சுப்புலெட்சுமி (கி.பி.1916-2004) : இந்திய வரலாற்றில் இடம்பெற்ற பெண்மணிகளுள் இவர் தனித்துவம் மிக்கவர். தனது இசைத்துறையினாலும் குரல் வளத்தினாலும் 70 ஆண்டுகள் ரசிகர்களை கட்டி போட்டவர். ஜக்கிய நாடுகள் சபையில் முதன்முதலில் பாடிய பெருமை பெற்றவர். பாரத் ரத்னா மற்றும் ராமன் மகசேசே ஆகிய இந்தியாவின் உயரிய விருதுகளை வாங்கிய இசைத்துறையின் முதல் பெண்மணி இவர். இவர் கி.பி.1916 செப்டம்பர் 16ல் மதுரையில் சுப்ரமணிய ஐயர் - சண்முகவடிவேலு அம்மாள் மகளாக பிறந்தார். இவர் இளமையில் செம்மாங்குடி சீனிவாச ஐயரிடம் கர்நாடக இசையையும் பண்டிட் நாராயணராவ் வியாஸிடம் இந்துஸ்தானி இசையையும் கற்று தேர்ந்தார். இவர் தனது 11வது வயதில் திருச்சி மலைகோயிலுக்குள் உள்ள 100 தூண் மண்டபத்தில் முதல் இசை கச்சேரியை நடத்தினார். 13வது வயதில் மெட்ராஸ் மியூசிக் அகாடமியில் இசை கச்சேரி நடத்தினார். அடுத்த 4 வருடத்திற்குள் சென்னை மியூசிக் அகாடமியில் தனிச்கச்சேரி நடத்தும் அளவுக்கு வளர்ந்தார். கி.பி.1936ல் சென்னைக்கு இடம் பெயர்ந்தார். மைசூர் மகாராஜாவின் அவையிலும் பாடும் பெருமையை பெற்றார். நடன கலைஞர் பத்மா சுப்ரமணியத்தின் தந்தையான கே.சுப்ரமண...

125) கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

Image
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் (கி.பி.1926 - வாழ்ந்து வருகிறார்) : இந்திய வரலாற்றில் எத்தனையோ பெண்களும் ஆண்களுக்கு சரிநிகர் சமானமாக போராட்ட களத்தில் நின்று வென்று காட்டியுள்ளனர். தனது தள்ளாத 96 வயதிலும் இன்றும் போராட்ட களத்தில் நின்று உரிமைகளுக்காக சமூக சேவைகளுக்கு போராடி கொண்டிருக்கும் பெண்மணி பத்மஶ்ரீ விருதை வென்ற சமூக சேவகரான கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்கள். இவர் கி.பி.1926 ஜூன் 16ல் திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் ஜெகந்தாதன் - நாகம்மாள் தம்பதியருக்கு மகளாக பிறந்தார். பிறப்பிலையே வறுமை நிலையில் தான் பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும் இவர் தனது பட்டப்படிப்பை முடித்தார். இளமையில் கல்வி கற்க ஆலிஸ் மகாராஜா என்ற பெண்மணியிடம் திண்ணை பள்ளியில் தங்கி படித்தார். அந்த பெண்மணி இவரை மகள் போல பாவித்து தன்னுடன் தங்க வைத்து உணவும் கல்வியும் கற்று கொடுத்தார். அவர் தன் சொந்த ஊருக்கு புறப்பட்ட சமயத்தில் இன்னொரு பெண்மணியிடம் இவரை கல்வி கற்க கொண்டு போய் விட்டார். அந்த பெண்மணி தான் டி.வி.எஸ். சுந்தரம் அய்யங்காரின் மகளான செளந்திரம்மாள். அவர் இவரை தன் மகள் போல வள...

124) பியாரி பீபி

பியாரி பிபீ (கி.பி.1922-???) இந்திய விடுதலை போராட்டத்தில் எத்தனையோ பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் ஈடுபட்டு சிறை சென்ற முதல் முஸ்லீம் பெண்மணியாக கரூர் பியாரி பிபீ அறியப்படுகிறார். சொந்த சமுதாய மக்களால் விலக்கி வைக்கப்பட்டும் கர்ப்பிணியாக சிறையில் இருந்து கருச்சிதைவு ஏற்பட்டும் கலங்காது நாட்டு விடுதலையே முக்கியம் என்று போராடிய பெண்மணி இவர். இவர் கி.பி.1922ல் திண்டுக்கல்லில் காவல்துறை அதிகாரியாக இருந்த சையத் இஸ்மாயில் என்பவருக்கு மகளாக பிறந்தார். இவருக்கு சுதந்திர போராட்ட வீரர் நன்னா சாகிப்புடன் திருமணம் நடைபெற்றது. இவர் கணவருடன் சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்டார். கி.பி.1941ல் இவர் 5 மாத கர்ப்பிணியாக இருக்கும்போது போராட்டத்தில் கலந்து கொண்டதால் சிறை வைக்கப்பட்டார். சிறையில் இவரது கருகருப்பும் ஏற்பட்டு போனது. முஸ்லீம் பெண்மணி போராட்டத்தில் கலந்து கொள்வதை விரும்பாத கரூர் நகர முஸ்லீம் மக்கள் இவரது போராட்டத்தை எதிர்த்தனர். இவரை போலீஸார் கைது செய்து அழைத்து செல்லும்போது கரூர் நகர முஸ்ஸீம் மக்கள் இவர் மீது கற்களை வீசி எறிந்தனர். ஜமாத்தில் இவரது குடும்பத்தை விலக்கி வைத்தனர். ஆனாலும் இவ...

123) டாக்டர் தருமாம்பாள்

Image
டாக்டர் தருமாம்பாள் (கி.பி.1890-1959) : இந்திய வரலாற்றில் மறக்கமுடியாத இடத்தை பெண்களில் சிலர் தியாகத்தாலும் தங்களது உயரிய மக்கள் நல பணிகளாலும் இடம்பிடித்து உள்ளனர். அவர்களுள் ஒருவர் தான் டாக்டர் தருமாம்பாள் என்ற மகத்தான பெண்ணுரிமைவாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதி. இவர் மருத்துவராக தனது சேவையிலும் மட்டுமல்ல நீதிக்கட்சி மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் ஆகியவற்றிலும் உறுப்பினராக இருந்தவர். சமூக சீர்திருத்தம், பெண்ணுரிமை, இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் ஆகியவற்றில் தீவிரமாக கள பணியாற்றியவர் இவர்.  இவர் கி.பி.1890ல் தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையில் சாமிநாதன் செட்டியார் மற்றும் பாப்பம்மாள் ஆகியோருக்கு மகளாக பிறந்தார். பிறக்கும்போது சரஸ்வதி என்று அழைக்கப்பட்ட பெயர் பின்னாளில் இவரது சேவைகளின் காரணமாக தருமாம்பாள் என்றாகியது. துணி வியாபாரம் செய்து வந்த இவரது தந்தை இளம்வயதிலையே இறக்க இவரது தாயாரின் வளர்ப்பில் வளர்ந்து அவரின் இறப்பிற்கு பின்னர் இலக்குமி என்ற பெண்ணின் வளர்ப்பில் வளர்ந்தார். நாடகத்தின் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக நாடக நடிகரான குடகயேற்றம் முனுசாமி நாயுடு என்பவரை திருமணம் செய்து கொண...

122) ரமா மேத்தா கண்ட்வாலா

Image
ரமா மேத்தா கண்ட்வாலா (கி.பி.1926 - 2021) : இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் நிறைய பெண்கள் ஆயுதமேந்தி படைகளில் இணைந்து தங்களை வருத்திக் கொண்டு இந்திய விடுதலைக்காக பாடுபட்டுள்ளனர். அவர்களில் இன்றும் விடுதலை போராட்டத்தின் சாட்சியாக நம்முடன் வாழ்ந்து சமீபத்தில் மறைந்த ரமா மேத்தா கண்ட்வாலாவும் ஒருவர். அதுமட்டுமில்லாது ஜப்பானிய மொழி கற்றதால் இவர் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக 50 ஆண்டுகளுக்கு மேல் பணியில் இருந்தார். இவர் கி.பி.1926 டிசம்பர் 3ல் ஒரு வசதியான குடும்பத்தில் பர்மாவிலுள்ள ரங்கூன் நகரில் (இன்றைய மியான்மர் யாங்கூன் நகர்) லீலாவதி சாகன்லால் மேத்தா என்பவருக்கு பிறந்த 7 குழந்தைகளில் 5வதாக பிறந்தார். இவர் படித்த தனியார் பள்ளியில் "பிரிட்டன் எப்போதும் அலைகளை ஆளவேண்டும்" என்பதையே வலியுறுத்தினர். இவரது தாத்தா ரங்கூனில் ஒரு மருத்துவராக பணியாற்றினார். இவரது தாயார் லீலாவதி நேதாஜியின் இந்திய தேசிய படையின் ஆட்சேர்ப்பு அதிகாரியாக பணியாற்றினார். கி.பி.1943ல் நேதாஜி ரங்கூனில் ஆற்றிய சொற்பொழிவை கேட்ட ரமாபாய் மற்றும் அவரது அக்கா நீலமும் ஜான்ஸி ராணி ரெஜிமெண்ட்டில் இணைந்தனர். ரமாபாய் படைப...

121) கோவிந்தம்மாள்

Image
கோவிந்தம்மாள் (கி.பி.1927-2016) : இந்திய வரலாற்றில் இளமையிலையே நாட்டுக்காக போராடிய தன் சொத்துக்களை இழந்து வறுமையில் வாடியும் அதை பற்றி பெரிதாக எண்ணாமல் நாட்டின் நலன் ஒன்றை மட்டுமே நினைத்த தியாக உள்ளம் கொண்ட பெண்மணிகள் பலர் உண்டு. அவர்களுள் ஒருவர் தான் தமிழகத்தின் வட ஆற்காட்டில் பிறந்து மலேஷியாவில் வாழ்ந்து நேதாஜியின் இந்திய தேசிய படையில் வீரராக உயர்ந்த கோவிந்தம்மாள் என்பவர். இவர் கி.பி.1927 பிப்ரவரி 22ல் இன்றைய வட ஆற்காட்டில் நெசவு தொழில் செய்பவரான முனுசாமி செட்டியார் என்பவருக்கு மகளாக பிறந்தார். இவர் பிறந்த 3 மாதத்திலையே இவரது தந்தை குடும்பத்துடன் மலேஷியாவுக்கு தொழிலுக்கு வந்தார். அவருக்கு தமிழ் தெலுங்கு கன்னடம் ஆங்கிலம் ஆகிய மொழிகள் அத்துபடியானதால்  மலேஷியாவில் அஞ்சல் துறையில் பணியில் சேர்ந்தார். பின்னர் நகை தொழிலையும் செய்தார். கோவிந்தம்மாள் 8ம் வகுப்பு வரை படித்தார். படித்த பின்னர் கி.பி.1940ல் இவரது 13வயதிலையே அருணாசலம் செட்டியார் என்பவரோடு திருமணம் நடந்த்து. கணவரும் மனைவியும் மலேஷியா ரப்பர் தோட்டத்தில் சில காலம் பணிபுரிந்தனர். இந்த நேரத்தில் தான் நேதாஜி மலேஷியா ரப்பர் தொழிலாள...

120) மிர்ரா அல்ஃபாஸா

Image
மிர்ரா அல்ஃபாஸா (கி.பி.1878-1973) : இந்திய வரலாற்றில் வெளிநாட்டை சேர்ந்த பெண்களும் இடம்பிடித்து உள்ளனர். அவர்கள் சமூக சேவைக்காகவும் இந்தியாவின் அடிமைத்தனத்தை அகற்றவும் பாடுபட்டனர். இவர் ஆன்மீகத்தை அறிந்து கொண்டு இந்தியாவில் பாண்டிச்சேரி ஆரோவில் "அரவிந்தர் ஆஸ்ரமம்" அமைத்து ஆன்மீகத்தை பரப்பினார். அது மட்டுமல்லாது அன்னிபெசண்ட் அம்மையாரை இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட தூண்டியதும் இவரே. பாண்டிச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமத்தில் அம்மா என்று அழைக்கப்படுகிறார். கி.பி.1878 பிப்ரவரி 21ல் பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் நகரில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார். இவர் துருக்கிய யூத தந்தையான மொய்ஸ் மாரீஸ் அல்பாஸா மற்றும் எகிப்திய யூத தாயான மதில்டே இஸ்மாலூனுக்கும் மகளாக பிளாஞ்ச் ரேச்சல் மிர்ரா அஸ்ஃபாஸா என்ற பெயரில் பிறந்தார். இவர் பிறப்பதற்கு ஒரு வருடம் முன்பு தான் இவரது குடும்பம் பிரான்ஸ்க்கு குடிபெயர்ந்தது. 7 வயதில் படிக்க கற்றுக்கொண்டு 9 வயதில் தான் பள்ளியில் சேர்ந்து கலை, டென்னிஸ், இசை மற்றும் பாடல் ஆகியவற்றை கற்பதில் ஆர்வம் காட்டினார். 14 வயதிற்குள் தந்தையின் புத்தக அலமாரியில் உள்ள எல்லா புத்தகத்தையும...

119) சூர்யா தேவி & பரிமள் தேவி

சூர்யா தேவி, பரிமள்‌ தேவி (???? - கி.பி.715) சரித்திரத்தில் எத்தனையோ பெண்கள் தங்கள் தியாகத்தாலும் நாட்டுபற்றினாலும் இடம்பெற்றுள்ளனர். அவர்களுள் சகோதரிகள் இருவரும் தங்கள் இராஜ்ஜியத்தை அழித்து தங்கள் தாய் தந்தையர்களை கொன்ற தளபதியை வஞ்சகத்தால் அவரது அரசரால் கொல்லுவதற்கு காரணமாக இருந்து தங்களின் நோக்கம் நிறைவேறியதும் பழிவாங்கிய திருப்தியில் உயிரோடு சமாதியானார்கள். கி.பி.7ம் நூற்றாண்டின் மத்தியில் சிந்து பகுதியின் சாச் வம்ச ஆட்சி நடைபெற்று வந்தது. ராய் வம்சத்தின் கடைசி அரசரான ராஜா ஷாஹஸியின் மறைவுக்கு பின்னர் அரசி சுஹநாடியை பிராமணனான மந்திரி சாச் மணந்து கொண்டு சாச் வம்ச ஆட்சியை ஆரம்பித்தார். அவருக்கு பின்னர் அவரது மகனான தாஹிர் சென் மற்றும் தஹர்சியா ஆகியோர்கள் சிந்துவை பிரித்து ஆண்டனர். தாஹிர் சென் அலோரில் இருந்து மேல் சிந்துவையும் தஹர்சியா தற்போதைய நவாப்ஷாவுக்கு அருகிலுள்ள பிராமணாபாத்தில் இருந்தும் ஆண்டனர். ஏற்கனவே கி.பி.638ல் இருந்து பலமுறை அரேபியர்கள் படையெடுத்து தோல்வியை தழுவினர். இந்த நிலையில் இலங்கை மன்னரிடம் இருந்து உமையத் கலீபாவுக்கு சென்ற பரிசு பொருட்கள் அடங்கிய கப்பல் கடற்கொள்ளையால்...

118) இராணி உதயமதி

Image
இராணி உதயமதி  இந்திய வரலாற்றில் எத்தனையோ பெண்கள் தங்கள் தியாகத்தாலும் கருணையினாலும் மக்கள் சேவையினாலும் புகழ்பெற்றுள்ளனர். அவர்களுள் ஒருவரான இவர் சரித்திர புகழ்பெற்ற ‌ராணியின் கிணறு (ராணி கி வாவ்) கட்டியவர். தனது கணவரின் நினைவாக இந்த கிணற்றை கட்டி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தவர். இந்திய வரலாற்றில் தனது காதல் மனைவிக்காக ஷாஜஹான் கட்டிய தாஜ்மஹால் உலகப்புகழ் பெற்றது. ஆனால் அதற்கு குறைவில்லாத வகையில் தனது மறைந்த கணவரின் மீது கொண்ட அன்பினால் அவரின் நினைவாக கட்டப்பட்ட இந்த ராணியின் கிணறும் புகழ் வாய்ந்தது தான். ராணி உதயமதி குஜராத்தின் சாளுக்கிய சோலங்கி வம்சத்து அரசனான முதல் பீமதேவ்வின் மனைவி. பீமதேவ் கி.பி.1062ல் இறந்து போனார். அவருக்கு பின்னர் அவரது மகனான முதல் கர்ணதேவ் ஆட்சிக்கு வந்தார். மகனின் ஆட்சியில் தனது கணவரின் நினைவுசின்னம் அமைக்க முடிவு செய்தார். சாளுக்கிய சோலங்கி வம்சத்து தலைநகரான அனஹில்லா படான் (தற்போது படான்) மிகவும் வறட்சி மிகுந்த பிரதேசமாக இருந்தது. தண்ணீர் பற்றாக்குறை அதிகம் இருந்ததால் சரஸ்வதி ஆற்றில் இருந்து வரும் வெள்ளம் சமயங்களில் நீரை தேக்கவும் ஆழ்கிணறு அமைக...